#Breaking : திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Due to continuous rain, only schools in Thiruvarur will be closed tomorrow.

தொடர் மழை காரணமாக திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாளை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தூத்துக்குடி, நெல்லை மற்றும் செங்கல்பட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.