டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம், சர்வதேச முதலீடுகளை பெற அவர் முயற்சிப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதானி மீது வழக்கு தொடரபட்டுள்ளதால், இந்திய பங்குச்சந்தையில் அதானி பங்குகள் மற்றும் அதானி குழுமத்தின் மீது முதலீடு செய்துள்ள மற்ற நிறுவனங்களின் பங்குகள் […]
டெல்லி : முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது ஒரு மிகபெரிய குற்றசாட்டை முன்வைத்தது. முதலீட்டாளர்களை ஈர்க்க பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் எனக் கூறியது. இதனை அடுத்து, இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மிகப்பெரும் சரிவை சந்தித்தது. தற்போது அதேபோல மீண்டும் ஒரு அமெரிக்க குற்றசாட்டை அதானி குழுமம் எதிர்கொண்டுள்ளது. இதனால், இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மொத்தமாக 10% வரை சரிவை கண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அதானி […]
டெல்லி : அமெரிக்காவில் கவுதம் அதானி உள்ளிட்ட அதானி குடும்பத்தினருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்’ என்று அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு சுமார் 2,110 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் […]
டெல்லி : இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி மீது அமெரிக்காவில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாவது, சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ. 2110 கோடி) லஞ்சம் கொடுக்க கொடுக்கப்பட்டதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் […]
டெல்லி : இன்று (நவம்பர் 20) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு மற்றும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2ஆம் கட்ட தேர்தல் என வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 58.22% வாக்கு சதவீதமும், ஜார்கண்ட் மாநில 2ஆம் கட்ட தேர்தலில் 67.59% வாக்கு சதவீதமும் பதிவாகியுள்ளன. […]
லக்னோ : இன்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்று வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில், காஜியாபாத், கதேஹாரி, கெய்ர், குந்தர்கி, கர்ஹால், மஜவான், மீராபூர், புல்பூர் மற்றும் சிசாமாவ் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி விட்டனர். மேலும், சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் , அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, சன்னிதானம் முதல் நிலக்கல் […]
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று அனல் பறக்கும் இறுதிப் பிரச்சாரம் முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவானது தொடங்கியிருக்கிறது. மகாராஷ்டிரா தேர்தல் களம் : மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) ஆகியவை […]
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு விறுப்பாக நடைபெற்றது. தேர்தல் விதிமுறைகளின்படி, தேர்தலுக்கு முந்தைய நாள் பிரச்சாரத்தை முடிக்கவேண்டும் என்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று அனல் பறக்கும் இறுதிப்பிரச்சாரம் செய்து முடித்துக்கொண்டார்கள். மகாராஷ்டிரா தேர்தல் நாளை நவம்பர் 20 புதன்கிழமை மகாராஷ்டிராவின் 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணியில் பாஜக (BJP), சிவசேனா (ஏக்நாத் […]
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது. மேலும், மொழியை தேர்வு செய்யும் பட்டனில் கூட இந்தி மொழி இருந்ததால், இந்தி தெரியாத பயணர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் இந்தி திணிக்கப்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். […]
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அந்த கனவுகளைச் சீக்கிரமாக அடைவதற்காக வித்தியாசமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். அப்படி தான் பெங்களூரில் உள்ள இளைஞன் ஒருவர் தன்னுடைய கனவை அடைய அனைவரையும் கவரும் வகையில், வித்தியாசமான முயற்சி ஒன்றை எடுத்திருக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த சாமுவேல் கிறிஸ்டி என்ற இளைஞர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு இப்போது ஆட்டோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார். […]
டெல்லி : ஆன்லைன் போலி பங்கு சந்தை மூலம் ரூ.100 கோடி வரையில் மோசடியில் ஈடுபட்டதாக சீனாவை சேர்ந்த ஃபாங் செஞ்சின் என்பவரை டெல்லி சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் மீது ரூ.100 கோடி வரையில் மோசடி வழக்கு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் அச்சுதன் என்பவர் சைபர் கிரைம் போலீசாரில் அளித்த புகாரில், தன்னிடம் ஆன்லைன் வாயிலாக பங்கு சந்தை முதலீடு குறித்து பயிற்றுவிப்பதாக கூறி வாட்ஸ்அப் செயலி வழியாக தொடர்பு […]
ஃபுளோரிடா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ GSAT N2 என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் தகவல் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. GSAT N2 வடிவமைப்பு : இஸ்ரோ வடிவமைத்த இந்த GSAT N2 செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது. GSAT N2 […]
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் தான் செயல்பட்டு வந்தது. மொழி தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் இருக்கும். அதில் தேவை இருப்பின் இந்தி மொழி தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், இன்று காலை முதல் LIC இணையதளம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கி வந்தது. மேலும், மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும் இந்தி மொழியில் இருந்ததால், மொழி மாற்றம் செய்வதும் […]
டெல்லி : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினமான இன்று (நவம்பர் 19) டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தனது பாட்டி இந்திரா காந்தி பற்றி காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்பு மற்றும் தைரியம் என இரண்டுக்கும் உதாரணமாக எனது பாட்டி (இந்திரா காந்தி) திகழ்கிறார். தேச நலன்களுக்கான பாதையில் அச்சமின்றி […]
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சி வருகிறது. இதற்கான முதற்கட்ட பணியாக, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள சத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்த்து. இந்த குழு ஆய்வு செய்ததில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் […]
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர தேர்தல் பரப்புரையில் பாஜக, காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பரப்புரை பணியில் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இந்த தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் மேற்கண்ட […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் . ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், நேற்று கட்சி, அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், பதவி விலகிய 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) இன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தார். இதனால், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, டெல்லியின் போக்குவரத்து […]
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில் நட்வர்பாய் மெத்தானியா (18 வயது) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும், அக்கல்லூரியின் விடுதியில் தங்கி தனது படிப்பை படித்துக் கொண்டு வருகிறார். இவரையும், இவருடன் சேர்த்து 10 மாணவர்களையும் கடந்த சனிக்கிழமை (நவ-15) அன்று அதே கல்லுரி விடுதியில் இருக்கும் சீனியர்கள் ஒரு சிலர் நிற்க வைத்து ராகிங் செய்துள்ளனர். வெகு நேரம், கிட்டத்தட்ட […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி பதவி என அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்து கொண்டார். கைலாஷ் கெலாட், டெல்லி மாநில போக்குவரத்துத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறை அமைச்சராக பொறுப்பில் இருந்து வந்தார். அவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி எம்எல்ஏவாகவும், மாநில அமைச்சராகவும் மக்கள் […]