அன்றாடம் நமது பல வேலைகளை செய்ய கைகள் உதவியாக இருக்கிறது. எனவே கைகள் தான் நம் தோழன் என்று கூட சொல்லலாம். அன்றாடம் பல வேலைகளை செய்ய உதவி புரியும் கைகளை நாம் எவ்வாறு பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம் என்பதனை இந்த படிப்பில் இருந்து படித்தறியலாம்.
கைகளில் பிரச்சனைகள் ஏற்பட காரணங்கள்:
கைகளில் பிரச்சனைகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. பலவிதமான கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை நாம் பயன்படுத்துவதாலும் இவ்வாறு பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
மேலும் இறந்த செல்களும் நமது கைகளில் பல சரும பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இறந்த செல்களை நீக்க:
unknown nodeகைகளில் இறந்த செல்களை நீக்க கரகரப்பான கீரிம்களை தடவி கைகளை நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சிறிது நேரங்கள் கழித்து மிதமான ஹேண்ட் வாஷை கைகளில் தடவ வேண்டும்.அதற்கு பிறகு சில நிமிடங்கள் கழித்து சிறிது வெதுவெதுப்பான நீரில் கைகளை நன்கு கழுவ வேண்டும்.இவ்வாறு செய்துவர இறந்த செல்கள் நீங்கும்.
எலுமிச்சை :
unknown nodeஎலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகிறது. இது தோலில் ஏற்படும் சுருக்கங்களையும் கரும்புள்ளிகளையும் நீக்க மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து எடுத்து ,1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து இந்த கலவையை கொண்டு சிறுது நேரம் கைகளில் மசாஜ் செய்து அதற்கு பிறகு 10 நிமிடம் பாலில் கைகளை ஊற வைத்து வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் கைகளை கழுவி வர கைகள் மென்மையாகவும், பளப்பளபாகவும் இருக்கும்.
எலுமிச்சையை சாறு எடுத்து கையில் கருமை இருக்கும் இடத்தில் போட வேண்டும். இவ்வாறு செய்து 1/2 மணி நேரம் ஊறவைத்து பின்பு கைகளை கழுவ விட வேண்டும். பிறகு அந்த இடங்களில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.எலுமிச்சை சாற்றை தடவி விட்டு மாய்ஸ்சுரைசரை கண்டிப்பாக தடவ வேண்டும்.அவ்வாறு செய்யா விட்டால் கைகளில் எலுமிச்சை சாறு கடுமையான வறட்சியை ஏற்படுத்தும்.
அரிசிமாவு :
unknown nodeஅரிசிமாவு நமது உடலுக்கு மிக சிறந்த உணவு பொருளாக பயன்படுகிறது.இது நமது சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள பேருதவி புரியும்.இது சிறந்த இயற்கை ஊட்டச்சத்து மிகுந்த பொருளாகவும் விளங்குகிறது.
அரிசிமாவு 2 ஸ்பூன் ,1 ஸ்பூன் பால், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கைகளில் கருமை மற்றும் வறட்சி ஊழல் இடங்களில் தடவ வேண்டும். அதற்கு பின் வெது வெதுப்பான நீரில் நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர கைகளில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கருமை நீங்கி காய் அழகாக மாறும்.
வாழைப்பழம் :
unknown nodeவாழைப்பழம் நமது உடலுக்கு மிக சிறந்த ஊட்டசத்து மிக்க உணவாகும்.இதனை உணவாக உட்கொண்டாலும் சரி தோலில் கருமைகள் மற்றும் சுருக்கள் இருக்கும் இடங்களில் வாழைப்பழத்தை மசித்து போட்டு வர கருமைகளும் ,சுருக்கங்களும் நீங்கி கைகள் அழகாக மாறும்.
தர்பூசணி :
unknown nodeதர்பூசணி பழம் கோடைகாலத்தில் மிக சிறைந்த உனவு பொருளாக பயன் படுகிறது.இந்த பழத்தில் அதிகமான நீர்சத்துகள் நிறைந்து காணப்படுவதால் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களை இந்த தர்பூசணி பழம் கொடுக்கிறது.
தர்பூசணி பழத்தை அரைத்து கைகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு 10 நிமிடங்கள் கழித்து கைகளை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனை வாரத்தில் 2 முறை செய்து வர நல்ல பலன் அளிக்கும்.
முல்தானி மெட்டி :
unknown nodeமுல்தானி மெட்டி பல விதமான சரும பிரச்சனைகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக பயன்பட்டு வருகிறது. இது பல ஆயுர்வேத மருந்துகளிலும், சருமத்திற்கு உபயோகப்படுத்தும் கீரிம் வகைகளிலும் அதிக அளவில் பயன்படுத்தபட்டு வருகிறது.
இயற்கையான மருந்தாக இருப்பதால் பல அபரிமிதமான நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. முல்தானி மெட்டியுடன் ஆரஞ்சு பழச்சாறு 2 ஸ்பூன்,பன்னீர் சிறிதளவு,எலுமிச்சை 1 ஸ்பூன்,கிளிசரின் ,தேன் கலந்து கைகளில் கருமை நிறம் இருக்கும் இடங்களில் பிரஷ்ஷால் பூச வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்த்து வர கைகளில் இருக்கும் கருமை மறைந்து கைகள் பளபளக்கும்.