இன்று கருணாநிதி என்னும் சூரியன் உதித்த நாள்!

Published by
லீனா

கலைஞர் கருணாநிதி இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. அதன் பின் இவரது பெயரை முத்துவேல் கருணாநிதி என்று மாற்றிக் கொண்டார். முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக பிறந்த இவர், திருக்குவளை என்ற குக்கிராமத்தில், 1924-ம் ஆண்டு, ஜூன்-3ம் நாள் பிறந்தார்.

இவர் சிறுவயதில் இருந்தே, தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதை தவிர, பல்வேறு கவிதைகள், புத்தகங்கள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார்.

இவர் தூக்குமேடை என்ற நாடகத்தில் நடித்ததற்கு, எம்.ஆர்.ராதா, இவருக்கு கலைஞர் என்ற பட்டம் அளித்தார். இவர் அளித்த பட்டத்தை வைத்தே இன்று வரை அழைக்கப்படுகிறார். இவர் தன்னுடைய 14-வது வயதில் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, இவர் அரசியலில் ஈடுபட்டார். இவர் தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார்.

இவர் உடல்நலக்குறைவால், 2018, ஆகஸ்ட், 7-ம் நாள், சென்னை மருத்துவமனையில் காலமானார். இன்று இவரது 96-வது பிறந்தநாள், இவரது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

9 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

32 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago