எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இன்று விளாத்திகுளம் அருகே அமைச்சர் கடம்பூர் ராஜூசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினை குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளது என கூறினார். இதையடுத்து, பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்ததே அதிமுக தான், எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர் என தெரிவித்துள்ளார்.