மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்பதிவு நாளை துவங்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நாளை துவங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு விரைவாக முடிவெடுக்க தவறினால், மருத்துவர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வலக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என தமிழக அரசிற்கு மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு உயர் அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசியல்வாதிகள் மாறக்கூடியவர்கள், அரசு அதிகாரிகள் மரமாட்டார்கள் என்று குறிப்பிட்டு பேசிய நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் இணைந்து நீதிமன்றத்துடன் விளையாடக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சிபிஐ இணை இயக்குனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யாத சிபிஐ இணை இயக்குனர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஜன-21க்குள் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசிடமிருந்து ரூ.900 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.1,146,12 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், இதுவரை ரூ.900 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில், முதல்வரின் பெயரில் கல்வெட்டு வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ம் தேதி ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு சோழன்வந்தான் பகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் அவர்கள் வருகை தந்தார். பொதுமக்கள் எதிர்ப்பு : இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரை காளைகள் வெளிவரும் வாடிவாசலில் கல்வெட்டில் பொறிக்க வேண்டுமென்று பேரூராட்சி […]
18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரிய வழக்கில், திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவரும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த உயநீதிமன்ற மதுரை கிளை, 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 கிராம ஊராட்சி, மற்றும் அதற்குற்பட்ட 77 குக்கிராமங்களில் மதுக்கடைகள் இல்லை என கூறியுள்ளனர். மது இல்லா ஒன்றியம் : மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 36 கிராம ஊராட்சி மற்றும் அதற்குற்பட்ட 77 குக்கிராமங்களில் மதுக்கடைகள் இல்லை. மேலும் இது குறித்து போலீசார் கூறியதாவது; இந்த ஒன்றியத்தில் டாஸ்மாக் கடை திறந்து ஓரி மணிநேரத்திற்குளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு மது கடையை அடைத்துள்ளனர். மேலும், […]
மதுரை மாவட்ட காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணமடைந்துள்ளார். இது அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. விசாரணை கைதி மரணம் : மதுரை மாவட்டத்தில், சின்னவெள்ளையன் என்ற நபர் தனிப்படை போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினரால் மதுரை கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கைதி திடீரென மரணமடைந்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்கின்றன. மருத்துவ பரிசோதனை : இந்நிலையில் ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. காளைகளுக்கான மருத்துவப்பரிசோதனை முகாம் நடைபெற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ சான்று காளைகளின் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட […]
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். அவனியாபுரத்தில் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார் மதுரை ஆட்சியர் நடராஜன். பின்னர் இது தொடர்பாக மதுரை ஆட்சியர் நடராஜன் கூறுகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளை கூறியுள்ளனர் என்று மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை வைகை ஆற்றில் உள்ள மையமண்டபம் 50 ஆண்டுகளுக்குப்பிறகு மறுசீரமைக்கப்படுகிறது. மதுரை வைகை ஆற்றின் நடுவே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டமைய மண்டபம் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இந்த மண்டபத்தில் 36 தூண்கள் இருந்த நிலையில் தற்போது 24 தூண்கள் மட்டுமே உள்ளன. மிகவும் சிதிலமடைந்து காணப்படும் இந்த மண்டபத்தை மறுசீரமைக்க 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும், தமிழக அரசும் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, சுமார் 43 லட்ச ரூபாய் […]
டிஜிபி ராஜேந்திரனின் பனி நியமனத்தை எதிர்த்து, மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் டி.கே.ராஜேந்திரனின் பதவி நீட்டிப்பு குறித்தும், பணி நீட்டிப்பை தடை செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கு சசிதரன், ஆதிகேசவேலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. டிஜிபி பணி நியமனத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்து வலக்கை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மதுரை அலங்காநல்லூரில் தமிழர் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளதால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் , வரும் 17ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவ பரிசோதனை : இந்நிலையில், கால்நடை மருத்துவர் ராஜா முன்னிலையில், காளைகளின் வயது, உயரம், நோய் அறிகுறிகள் மற்றும் உடல் தகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் காளைகளின் உரிமையாளர்களிடம் குடும்ப அட்டை மற்றும் ஆதார் […]
ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், இறந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் இறந்த வாலிபரின் உடல் தேனீ மருத்துவக்கல்லூரியை சேர்ந்த சிறந்த மருத்துவக்குழுவை கொண்டு மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய சிறையில் புதிய தொழில் நுட்பத்தில் தொலைக்காட்சி வழங்க கோரிய வழக்கில், சிறைத்துறை தலைவருக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மத்திய சிறையில் புதிய தொழில்நுட்பத்தில் தொலைக்காட்சி வழங்க கோரிய வழக்கில் ஜன.22க்குள் உரிய முடிவு எடுக்க சிறைத்துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹெச்.ஐ.வி இரத்தத்தை தானம் செய்த வாலிபர் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வாலிபரின் சாவில் மர்மம் உள்ளதாகவும், பிற மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது. பிரேத பரிசோதனை : இதையடுத்து நெல்லை, தேனி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனையின் ஏதாவது ஒரு மருத்துவமனையின் 2 தடவியல் நிபுணர்களை கொண்டு பரிசோதனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து தேனி மருத்துவக்கல்லூரியை சேர்ந்த தடவியல் […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், பதவி ஏற்ற உடனேயே அவர் செய்துள்ள நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக பதிவாளர் திடீரென்று ராஜினாமா செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருதரப்பினர் இடையே போட்டி நிலவி வருகிறது. அவனியாபுரத்தில் ஜன.15ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இங்கு ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தென்கால் பாசன விவசாய சங்கத்தினரும் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாய சங்கத்தினர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர். இதனை எதிர்த்து தனியொரு அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கூடாது என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். […]
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அவனியாபுரத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அவனியாபுரத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. .இதன் பின்னர் இந்த கூட்டத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தை முதல் நாள் நடத்தவும், விழா குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.