அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை வெள்ளத்தால் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகமே கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்க கூடிய இந்த சூழ்நிலையில், பல மாநிலங்களில் கடந்த நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள மக்கள் அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அது போல அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் வெள்ளத்தால், இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.