மும்பையில் டோங்ரி பகுதியில் அடுக்கு மாடி கட்டிடம் ஓன்று இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் 12 பேர் இறந்து உள்ளனர்.பலர் இந்த கட்டட ஈடுபாடுகளில் சிக்கி உள்ளனர். நான்குமாடி கட்டிடம் என்பதாலும் , மிக குறுகிய பகுதி என்பதாலும் மீட்பு பணியில் ஈடுபட கஷ்டமாக உள்ளது.
மேலும் மீட்பு இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இந்த நான்குமாடி கட்டிடம் 100 வருடம் பழமைவாய்ந்த கட்டிடம் என்பதால் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இடிந்து விழுந்து இருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றனர்.
unknown nodeகட்டிடம் இடிந்து விழுந்த அருகில் தான் மருத்துவமனை இருப்பதால் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகின்றனர்.மேலும் மீட்பு பணியில் மூன்று தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.