நண்பரைக் கொன்ற 16 வயது சிறுவன் கைது..!

Default Image

மகாராஷ்டிராவில் நண்பரைக் கொன்றதற்காக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் இருந்து 16 வயது சிறுவன் தனது நண்பனைக் குத்தியதற்கு கைது செய்யப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தது அமன் ஷேக் (18) என அடையாளம் காணப்பட்டதாக மூத்த ஆய்வாளர் மஞ்சித் பாகா தெரிவித்தார்.

இருவருக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் அமன் ஷேக்கை கத்தியால் குத்தி விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த  அமன் ஷேக்கை மற்ற நண்பர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh
S-400 air defense system