ஆர்.டி.எக்ஸ் நிரப்பப்பட்ட டேங்கரில் கோவா செல்லும் 2 பாகிஸ்தானியர்கள்.! போலீசாருக்கு தகவல்..!

ஆர்.டி.எக்ஸ் நிரப்பப்பட்ட டேங்கரில் இரண்டு பாகிஸ்தானியர்கள் மும்பையில் இருந்து கோவாவுக்கு செல்வதாக மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.
கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டவர் தனது பெயரை பாண்டே என்று கூறியதாக தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி காவல்துறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.