பெண் ஒருவரை அனைவரது துணிகளையும் துவைக்க சொல்லிய நபருக்கு, 2000 பெண்களுக்கு 6 மாதம் இலவசமாக துணி துவைத்து கொடுக்க வேண்டும் என பீகார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகாரில் உள்ள மதுபானி மாவட்டத்தில் உள்ள ஜஞ்சர்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு பெண்ணை அனைவரது துணிகளையும் துவைக்க சொல்லி துன்புறுத்தியதாகவும், அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இந்த பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர், கிராமத்திலுள்ள அனைத்து பெண்களின் ஆடைகளையும் துவைக்க வேண்டும் எனவும், இதனால் அவர் மனதில் பெண்கள் மீது ஒரு மரியாதை உருவாகும் எனவும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் குற்றம் சாட்டப்பட்ட நபர் பெண்களின் ஆடைகளை கழுவிய பிறகு அவர்கள் துணிகளை இஸ்திரி செய்து கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 2000 பெண்கள் உள்ளதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நபர் 20 வயதுடைய லால் குமார் ஆவார். இவர் ஏற்கனவே சலவை வேலைதான் செய்து வருவதாகவும், இதனால் தான் இவருக்கு இப்படிப்பட்ட ஒரு தண்டனையை கொடுத்து பெண்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…