தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து...! யாருக்கெல்லாம் கொடுக்க கூடாது...!

The Defense Research and Development Organization says that 2DG corona should not be used in water.

தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்தை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு  தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

மருந்து பாதுகாப்பு துறையின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், தண்ணீரில் கலந்து குடிக்கும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 2டிஜி புதிய கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு கடந்த 17-ஆம் தேதி அறிமுகம் செய்தது.

இதனை அடுத்து, இந்த புதிய தடுப்பு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள  2 DG கொரோனா மருந்தின் விலை ரூ.990 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்தினை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு  தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த மருந்தினை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், நீரிய்வு நோயாளிகள், மாரடைப்பு, கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், சாதாரண முதல்  சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு அதிகபட்சம் 10 நாட்கள் வரைதான் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.