உத்திரபிரதேசத்தில் செல்பி எடுக்கும்போது படகு கவிழ்ந்து மூன்று சிறுமிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியோரியா மாவட்டத்தில் மகாதேவ் தால் குளம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த குளத்தில் 8 முதல் 12 வயதுடைய 7 சிறுமிகள் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதில் படகு திடீரென கவிழ்ந்ததில் 7 பேரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். இதில் 4 சிறுமிகளும், படகோட்டியும் நீந்தி கரையேறி உள்ளனர்.
3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கரையேறிய 4 சிறுமிகளில் ஒருவரின் நிலைமை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையில் நேரடியாக களத்திற்கு வந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டு அசுதோஷ் நிரஞ்சன், இறந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு அரசு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…