மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் மேலும் 339 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 339 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 14,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,57,450 ஆக உயர்ந்தது.
அம்மாநிலத்தில் கொரோனாவால் மேலும் 339 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,698 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 9,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,70,8473 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,64,562 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.