ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் நேற்று இரவு நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இரவு 7:15 மணியளவில், ரஜோரி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள அப்பர் டாங்கிரி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.