கேரளாவில் இன்று 49 பேருக்கு கொரோனா – பினராயி விஜயன்

Default Image

இன்று 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தமா எண்ணிக்கை 896 ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் இன்று மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 896 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 49 பேரில் 18 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள், 25 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள், மற்ற 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். தற்போது 359 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 532 ஆக உள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்