4th phase polling [File Image]
Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை (மே 13ம் தேதி) நான்காம் கட்ட வாக்குப்பதிவுநடக்கிறது.
இதுவரை மூன்று கட்டமாக 285 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடந்த மே 7ம் தேதி நடந்த 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்ததாக, ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நாளை 4ஆம் கட்ட வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த 96 தொகுதிகளிலும், மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதோடு சேர்த்து ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை (மே 13ம் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.
ஆந்திரப் பிரதேசம் – 25 தொகுதிகளில் 25
பீகார் – 40 தொகுதிகளில் 5
ஜார்கண்ட் – 14 தொகுதிகளில் 4
மத்தியப் பிரதேசம் – 29 தொகுதிகளில் 8
மகாராஷ்டிரா – 48 தொகுதிகளில் 11
ஒடிசா – 21 தொகுதிகளில் 4
எலங்கானா – 17 தொகுதிகளில் 17
உத்தரபிரதேசம் – 80 தொகுதிகளில் 13
மேற்கு வங்கம் – 42 தொகுதிகளில் 8
ஜம்மு காஷ்மீர் – ஐந்து தொகுதிகளில் 1
ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை உள்ளடக்கிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும் தெலுங்கானாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் பிஆர்எஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…