அசாம் ரைபிள் வீரர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் காயம்..!

Assam Rifle

தெற்கு மணிப்பூரில் உள்ள இந்திய-மியான்மர் எல்லைக்கு அருகே அசாம் ரைபிள் படை வீரர் ஒருவர்  சக வீரர்களை  துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னை தானே   சுட்டு கொண்டு  தற்கொலை செய்து கொண்டார். ஏஆர் பட்டாலியன் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில்  துப்பாக்கி குண்டு பாய்ந்த 6 படை வீரர்களும் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளன.  இச்சம்பவம் குறித்து மணிப்பூர் போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்” காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் நலமுடன்  இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் தேநீர் விருந்து- காங்கிரஸ் புறக்கணிப்பு..!

இந்த சம்பவத்துக்கும் மாநிலத்தில் நடந்து வரும் மோதலுக்கும் தொடர்பு இல்லை என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். தற்கொலை  செய்து கொண்ட அசாம் ரைபிள் படை வீரர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள சுராசந்திபூரில் வசிப்பவர் என கூறப்படுகிறது. தற்போது வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நோக்கம் தெளிவாக தெரியவில்லை. இது குறித்து அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

NASA - Netflix
eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai