63 பயணிகள் "நோ ஃப்ளை லிஸ்ட்" பட்டியலில் சேர்ப்பு – விமான போக்குவரத்து

63 பயணிகள் "நோ ஃப்ளை லிஸ்ட்" இல் வைக்கப்பட்டுள்ளனர் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்.

63 பயணிகள் “நோ ஃப்ளை லிஸ்ட்” இல் வைக்கப்பட்டுள்ளனர் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்.

கடந்த ஓராண்டில் விமான நிறுவனத்தின் உள் குழு பரிந்துரைத்தபடி, மொத்தம் 63 பயணிகள் “நோ ஃப்ளை லிஸ்ட்”-இல் வைக்கப்பட்டுள்ளனர் என்று (சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் (DGCA) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடத்தில் 2 சிறுநீர் கழித்தல் சம்பவங்கள் அடங்கும்.

சம்பந்தப்பட்ட பயணி தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள், தொடர்பு விவரங்கள், அடையாள ஆவணங்கள், நிகழ்ந்த தேதி, பிரிவு, விமான எண், தடை விதிக்கப்பட்ட காலம் போன்றவற்றைக் கொண்ட ‘நோ ஃப்ளை லிஸ்ட்’ DGCA-ஆல் பராமரிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. “நோ ஃப்ளை லிஸ்ட்” என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான பயணிகள் முகக்கவசம் அணியாதது, பணியாளர்களின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியாதது தொடர்பான விதிமீறல்களுக்காக இருந்தனர்.

சிறுநீர் கழித்தல் சம்பவங்கள் – விதிமுறைகளுக்கு இணங்காததற்காக பின்வரும் நடவடிக்கை.

1) AI-102 விமானம், 26.11.2022 தேதியன்று நியூயார்க்கிலிருந்து புது டெல்லி. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குனருக்கு ரூ.3,00,000 அபராதம் விதித்து, விமானியின் உரிமம் 3 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

2) AI-142, 06.12.2022 தேதியன்றுபாரீஸ் முதல் புது தில்லி விமானம். ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10,00,000 நிதி அபராதமாக DGCA விதித்துள்ளது. இந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் வி.கே.சிங் ராஜ்யசபாவில் இன்று தெரிவித்தார் என கூறியுள்ளனர்.