சித்தூரில் 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு, 45 பேர் காயம்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆந்திர மாநிலம் சித்தூரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் காயம்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பகரபேட்டா காட் சாலையில் 52 பயணிகளுடன் சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 44 பேர் காயமடைந்தனர். நேற்று இரவு 10:30 மணியளவில் பேருந்தில் பயணித்த பயணிகள் நகரிக்கு அருகில் உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பதி நகர்ப்புற காவல் துறையினரின் கூறுகையில், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் பகுதியைச் சேர்ந்த 52 பேர் கொண்ட குழு, நகரிக்கு அருகிலுள்ள கிராமத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் சென்றுள்ளனர். பேருந்து பாக்கராபேட்டா காட் சாலையை கடந்து திருப்பதி நோக்கி சென்றபோது அதிவேகமாக சென்றதால் பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது சம்பவம் குறித்து அந்த வழியாக சென்றவர்கள் சந்திரகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சந்திரகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், பயணிகளை பள்ளத்தாக்கில் இருந்து மீட்டனர். காயமடைந்தவர்கள் திருப்பத்தூரில் உள்ள எஸ்விஆர் ரூயா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி நகர்ப்புற எஸ்பி சி வெங்கட அப்பல நாயுடு ரூயா மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். டிரைவரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என நம்பப்படுகிறது என தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு சித்தூர் ஆட்சியர் எம்.ஹரிநாராயணன் உத்தரவிட்டார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago