விமானத்தில் சிகிக்சைக்காக சென்ற 6 மாத குழந்தை நடுவானில் உயிரிழந்தது !

பீகார் மாநிலத்தை சார்ந்த 6மாத குழந்தைக்கு பிறவியிலேயே இதயத்தில் குறைபாடு இருந்தது.அதனால் அக்குழந்தையின் பெற்றோர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிக்சை பெறுவதற்காக விமானத்தில் அழைத்து சென்று உள்ளனர்.
அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது குழந்தையின் உடல் நிலை மிக மோசமானது.பின்னர் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் அவசரம் அவசரமாக தரை இறங்கப்பட்டது.
விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழு உடனடியாக குழந்தையை பரிசோதனை செய்தனர். சோதனையில் குழந்தை ஏற்கனேவே இறந்ததாக மருத்துவர்கள் கூறினர்.சிகிக்சைக்காக அழைத்து வந்த குழந்தை விமானத்தில் உயிர் இழந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025