மகாராஷ்டிரா : வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து! 5 பேர் பலி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராணுவதிற்கு தேவையான வெடி மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்டது.

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது என்றும் இதில் 5 பேர் உயிரிழந்து இருக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, பாந்தரா மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இன்று காலை 10.30 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்து ஏற்பட்டதில் மேற்கூரை பெயர்ந்துள்ளது. விபத்து நேர்ந்த சமயத்தில் 12 பேர் அங்கிருத்துள்ளனர். சம்பவம் அறிந்த உடன் தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ” என தெரிவித்தார்.
மேலும், ” இதுவரை 2 பேர் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடி மருந்துகளும் தயாரிக்கபடுகிறது என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
சோலி முடிஞ்சு.. ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா பந்து.!
February 17, 2025
மஜாபா..மஜாபா! ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம்! மதராஸி குட்டி டீசர் இதோ!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
February 17, 2025
ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!
February 17, 2025