நொய்டாவில் தெருநாய் ஒன்று, ஒருவயது குழந்தையைக் கடித்துக் குதறியதில் குழந்தை இறந்தது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், தெருநாய் கோரமாக தாக்கியதில் ஒருவயது குழந்தை உயிரிழந்த பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது. நோய்டாவின் ஹௌசிங் சொசைட்டி பகுதியில், சாலையின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்து, குடலை வெளியில் இழுத்து போட்டது. குழந்தையின் பெற்றோர்கள், ஹௌசிங் சொசைட்டியில் கட்டுமானப்பணியில் வேலை பார்த்து வந்தவர்கள்.
இதனையடுத்து குழந்தை மருத்துவமனையின் ஐசியு வில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த அகோரா சம்பவத்திற்கு பின் அப்பகுதியிலுள்ள மக்கள் தெருநாய் தொல்லைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கவுதம புத்த நகர் போலிஸிடம் தெரிவித்துள்ளனர்.