பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
நடிகை ஷபனா ஆஷ்மி, விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி( 69). இவர் மகாராஷ்ட்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மும்பை, புனே சாலையில் நேற்று காரில் சென்று கொண்டிருந்த போது காலாப்பூர் அருகே நேற்று மாலை 3.30 மணி அளவில் அவர் சென்ற கார், லாரி ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
unknown nodeஇந்த விபத்தில் படுகாயமடைந்து சபானாவை மீட்டு மும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் விபத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகை ஷபனா ஆஷ்மி, விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை சபானா தேசிய விருதினை 5 முறை பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.