ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி!

Gyanvapi mosque

ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கிது அலகாபாத் உயர் நீதிமன்றம்.

உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என்பது குறித்து ASI (இந்திய தொல்பொருள்) மூலம் ஆய்வு  செய்வதற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஞானவாபி மசூதிக்குள் உள்ள கட்டுமானத்தை அறிவியல் (carbon dating) பூர்வமாக ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்யும்போது கட்டிடத்திற்கு எந்தவிதமான சேதமும் ஏற்பட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியை, ‘பாதுகாக்கப்பட்ட பகுதியாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் கார்பன் டேட்டிங் கோரி இந்து தரப்பு தாக்கல் செய்த மனுவுக்கு நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi
Vyomika Singh
S-400 air defense system