கர்நாடகாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு தற்போது வருகிற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பஸ் உள்பட அனைத்து வகையான போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வணிக வளாகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.
அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முதல்முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கை அடுத்த 2 மாதங்களுக்கு நீட்டிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கர்நாடகாவில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் கோயில்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோயில்கள் திறக்கப்பட்டாலும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. நாளை முதல் 52 கோவில்களில் ஆன்லைன் சேவா முன்பதிவு தொடங்கும் என்று முஸ்ராய் துறை மாநில அமைச்சர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…