அமெரிக்காவை அரைய காத்திருக்கும் இந்தியா..!

அமெரிக்காவின்  29 பொருள்கள் மீது இந்தியா வாரியை அதிகாரிக்க    திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படகூடிய

அமெரிக்காவின்  29 பொருள்கள் மீது இந்தியா வாரியை அதிகாரிக்க    திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்தியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படகூடிய ஒரு  குறிப்பிட்ட பொருட்களுக்கு எல்லாம் அமெரிக்க  தனது வரியை 25 விழுக்காடு வரை உயர்த்தியது.இது இரு நாடுகளுக்கிடையையும் உள்ள வார்த்தகத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் அடாவடி தனத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக கடந்தாண்டு அறிவித்து இருந்தது .ஆனால் இடையே அமெரிக்கா தானகா வந்து நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக  அதனை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிற்கு சிக்கல் இருந்து வந்த நிலையில்  தற்போது அமெரிக்க பொருட்கள் மீதுள்ள வரிகளை உயர்த்தி இந்த அறிவிப்பை  வரும் வாரங்களிலே நடைமுறைப்படுத்த  இந்தியா முடிவெடுத்து தீவிரம் காட்ட உள்ளதாக   தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி 200 மில்லியன் டாலர் மதிப்புகள் உடைய  29 அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை அதிகபட்சமாக உயர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்த கடும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள காரணம் அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது வரியை உயர்த்தியது மற்றும் முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்திலிருந்து இந்தியாவை விலக்கி தூக்கியதிற்கும்  பதிலடி கொடுக்கவே  இந்த  வரி உயர்வை இந்தியா கையில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.