செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தி திவாஸ் எனப்படும், ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு. ஆனால், நம் பாரத நாட்டிற்கு பொதுமொழி இருப்பது மிகவும் அவசியம் ஆகும். அந்த மொழி உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வேலையை செய்ய முடியும்.’ என்பது போல பதிவிட்டு இருந்தார்.
அதன் பிறகான நிகழ்ச்சியிலும் இதே கருத்தை முன்மொழிந்தார். அமித்ஷாவின் இக்கருத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் வட்டாரத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமித்த கருத்தாக அமித்சாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது அமித்ஷா தனது கருத்து தவறுதலாக மக்கள் மத்தியில் புரிந்துகொள்ளப்பட்டது. என விளக்கம் கொடுத்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், நான் ஹிந்தி மொழி பேசாத மாநிலத்தை சேர்ந்தவன். இந்திய மொழிகளை வலிமைப்படுத்தவேண்டும் என குறிப்பிட்டேன். தாய் மொழியில் தான் மாணவர்கள் எதனையும் எளிதாக புரிந்து கொண்டு கற்றுக்கொள்ள முடியும். தாய் மொழி தாண்டி வேற்று மொழியை ஒருவர் படிக்க போகிறார் என்றால் அது ஹிந்தியாக இருக்கலாம் என குறிப்பிட்டேன். நம் தாய்மொழி தவிர்த்து வேறு மொழி முக்கியதுவம் கொடுத்துவந்தால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போல தாய் மொழி மறந்து ஆங்கிலம் பேசும் நிலைமை வந்துவிட கூடாது என்பதற்க்காக இவ்வாறு கூறினேன். தவிர நமது தாய் மொழியை தான் முதலில் வலிமைப்படுத்தவேண்டும். என விளக்கம் கொடுத்தார்.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…