Amit shah - Arvind kejriwal [File Image]
பஞ்சாப்: வரும் ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுடன் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைய உள்ளது. இந்த 7ஆம் கட்ட தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (ஞாயிறு) பஞ்சாப், லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, பஞ்சாபில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றியடைய செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது பஞ்சாபில் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்கு பிறகு பகவந்த் மான் அரசாங்கம் (ஆம் ஆத்மி அரசு) நீண்ட காலம் நீடிக்காது என்று கூறினார்.
இதனை அடுத்து, பஞ்சாப் அமிர்தசரஸில் வணிகர்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் பேசுகையில், அமித்ஷாவின் தேர்தல் பிரச்சாரத்தை நீங்கள் (மக்கள்) கேட்டீர்களா? பிரச்சார கூட்டத்தில் அவர் மிரட்டல் விடுத்தார். ஆரம்பத்தில், அவர் பஞ்சாப் மக்களை அதிகம் தவறாக பேசினார். ஆனால், தற்போது ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, பஞ்சாப் அரசு கவிழும் என அமித்ஷா மிரட்டல் விடுத்தார். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பகவந்த் மான் முதலமைச்சராக இருக்க மாட்டார் என்று கூறுகிறார் என தேர்தல் பிரச்சாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…