ராஜஸ்தான், கர்நாடகா, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமித்தது மத்திய அரசு.
அதன்படி நீதிபதி பங்கஜ் மித்தல், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிலிருந்து ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றப்படுவதாகவும், நீதிபதி பிபி வரலே கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், நீதிபதி ஏஎம் மாக்ரே ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.
unknown node