நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும்.
அந்த வகையில் தேசிய தேர்வுகள் முகமை இளங்கலை நீட் நுழைவு தேர்வு வரும் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையம் வலையாக கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாளாகும். தமிழகத்தில் இதுவரை சுமார் 1.05 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.