விமானப் பாதுகாப்பு கலாச்சார வாரம்..! சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்திற்கு அமித் ஷா வாழ்த்து..!

இந்தியாவின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (பிசிஏஎஸ்), நாட்டில் முதல் முறையாக ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5 வரை விமானப்

AmitShah

இந்தியாவின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (பிசிஏஎஸ்), நாட்டில் முதல் முறையாக ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5 வரை விமானப் பாதுகாப்பு கலாச்சார வாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. இது விமானப் பயணத்தில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

பாதுகாப்பு கலாச்சார வாரத்தின் முக்கிய நோக்கம் விமானப் போக்குவரத்து சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பயணிகளிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதாகும். இதில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம், விமான நிறுவனங்கள், சிஐஎஸ்எப் மற்றும் பயணிகள் போன்ற அனைத்து விமானப் பங்குதாரர்களும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், விமானப் பாதுகாப்பு கலாச்சார வாரத்தை முன்னிட்டு, சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்திற்கு (பிசிஏஎஸ்) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அவர், விமானப் பாதுகாப்பு கலாச்சார வாரத்தை முன்னிட்டு சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகத்திற்கு (பிசிஏஎஸ்) எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்கள் விமானப் போக்குவரத்து நிறுவல்களை முன்னெப்போதையும் விட மிகவும் பாதுகாப்பானதாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கான ஒரு புதிய அர்ப்பணிப்பை வாரக் கொண்டாட்டம் அவர்களுக்கு வழங்கட்டும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

unknown node