பெங்களூரு சேர்ந்த பரத் என்பவர் பிரபல ரவுடி இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவரது மீது கொலை, கொள்ளை என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உள்ளன.இதனால் பரத் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.கடந்த 22-ம் தேதி உத்தரபிரதேச பதுங்கி இருந்த பரத்தை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
அவரை நேற்று முன்தினம் நள்ளிரவு காரில் பெங்களூரு அழைத்து வந்தனர்.அப்போது பீனியா அருகே வந்தபோது , போலீசார் வந்த கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த காரில் இருந்த மர்மநபர்கள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனை பயன்படுத்தி பரத் தனது கூட்டாளிகளின் காரில் தப்பிச்சென்று விட்டார்.
தப்பி சென்ற பரத்தை யசருகட்டா மெயின் ரோட்டில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பரத் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் தினேஷ் பட்டீலை சுட்டார். இதனால் அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையெடுத்து மற்ற போலீசாரை பரத்தும் , அவரது கூட்டாளிகளும் துப்பாக்கியாலும் சுட முயற்சி செய்து ஓட முயன்றனர்.
இதனால் இன்ஸ்பெக்டர் லோகித் என்பவர் பரத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…