கடந்த சில நாட்களாக இந்தியாவை உலுக்கிய ஒரு சம்பவம் தான் தெலுங்கானாவில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த பிரியங்காவை எரித்து கொன்ற 4 பேரை தெலுங்கானா போலீசார் சுட்டு கொன்றனர்.இதனால் பலரும் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.குறிப்பாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை இது போன்று தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கு இடையில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் கருணை மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.தற்போது இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்றவகையில் தான் பீகாரில் உள்ள பக்சர் சிறைக்கு உத்தரவு ஓன்று பிறப்பிக்கபப்ட்டுள்ளது.அதாவது ,10 தூக்கு கயிறுகளை வருகிற 14-ஆம் தேதிக்குள் தயாரித்து தரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.பல சிறைகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் வசதி இருந்தாலும், ஒரு சில சிறைகளில் மட்டுமே தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது.அதில் ஓன்று தான் பக்சர் சிறை.இதனால் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்து வரும் நிலையில் தற்போது இந்த உத்தரவு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…