பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஜனவரி 30-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி 30-ம் தேதி 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகிறார். தமிழகம் வரும் ஜே.பி.நட்டா 234 சட்டமன்ற தொகுதிகளின் பாஜக அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் 29-ஆம் தேதி புதுச்சேரி வரும் ஜே.பி. நட்டா, அன்று இரவு புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அடுத்தநாள், புதுவை-கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் பாஜகாவின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா சிறப்புரையாற்றுகிறார். 30-ஆம் தேதி மதுரை வரும் அவர் 2 நாட்கள் தங்குகிறார். தென் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே, காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வரும் 23-ஆம் தேதி 3 நாள் பயணமாக தமிழகம் வரும் நிலையில், ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…