Categories: இந்தியா

யார் முன்னிலை.? பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி.! இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..

Published by
மணிகண்டன்

இடைத்தேர்தல் முடிவுகள் : ஹிமாச்சல் பிரதேசத்தில் 2 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் தலா ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் முன்னிலை பெற்று வருகிறது.

7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. காலை 8 மணிமுதல் இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஹிமாச்சல் பிரதேசத்தில்,  டெஹ்ரா தொகுதியில் எண்ணப்பட்டு முடிந்த 3 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் ஹோஷ்யர் சிங் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளரும், இமாச்சல பிரதேச முதல்வருமான சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் தற்போது சிறிய வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

அதே போல இமாச்சல பிரதேசத்தில் ஹமிர்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஒன்பது சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் புஷ்பிந்தர் வர்மா முன்னிலை வகிக்கிறார் என்றும் அடுத்த இடத்தில் பாஜகவின் ஆஷிஷ் சர்மா சற்று பின்தங்கியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர் மொஹிந்தர் பகத் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சுரீந்தர் கவுர் 3000 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் எத்தனை சேதமடைந்தன? விக்ரம் மிஸ்ரி கூறியது என்ன?

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

7 minutes ago

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

55 minutes ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

1 hour ago

ரவி மோகன் விவகாரம்: ”நாளைய விடியல்” – கெனிஷாவின் பதிவால் பரபரப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…

2 hours ago

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

2 hours ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

3 hours ago