டெல்லி – டொராண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஏர் கனடா: கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன்-5) அன்று டெல்லியில் இருந்து டொராண்டோவுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் கனடா விமானத்திற்கு (AC43) வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது.
நேற்று இரவு 10.50 மணியளவில் புறப்பட வேண்டிய இந்த ஏர் கனடா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன் அந்த விமானமும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லபட்டது மேலும், அதிலிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உட்பட்டதுடன் பயணிகளையும் சோதனை செய்துள்ளனர். கடந்த வாரமும் இதே போல ஒரு சம்பவம், டெல்லியில் இருந்து வாரணாசி வரை சென்ற இண்டிகோ விமானத்திற்கு இது போல போலி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025