Tag: bomb threat

வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்.!

பூக்கெத் : தாய்லாந்தில் இருந்து புது டெல்லிக்கு வரவிருந்த ஏர் இந்தியா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து,  ஃபூகெட் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இன்று காலை 9:30 மணிக்கு 156 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா AI379 விமானம் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து புது டெல்லியை நோக்கி புறப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தாய்லாந்து விமான […]

air india 3 Min Read
airIndia -Tailand

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் என்பது அவ்வபோது வெளியாகும்ஒரு வதந்தியாக இருந்தாலும், ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த மிரட்டல் TNCA-க்கு மெயில் வந்ததை அடுத்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதே போல டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கும் […]

bomb threat 3 Min Read
Chidambaram Stadium

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை பிரிவினரை அனுப்பினர். முதலமைச்சர் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததால், மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. இருப்பினும், இதுவரை இரு இடங்களிலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நேற்றைய தினம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு […]

#Kerala 3 Min Read
Kerala CMO bomb threat

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் எழுந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. இந்த மிரட்டல் இ-மெயில் மூலம் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் மற்றும் மோப்பநாய் குழுவினர் வெடிகுண்டை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். […]

#ADMK 2 Min Read
Bomb threat in EPS house at chennai

தொடர் அச்சுறுத்தல்கள்: விஸ்தாராவின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

புதுடெல்லி: கடந்த ஒரு வாரமாக பல்வேறு இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நிலையில், இன்றும் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற 6 விஸ்தாரா விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் உள்ளிட்ட 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆறு விமானங்களின் பட்டியல் UK25 விமானம் (டெல்லி முதல் பிராங்பேர்ட்) UK106 விமானம் (சிங்கப்பூர் முதல் […]

#mumbai 3 Min Read
Bomb threats to 6 Vistara

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்., சிக்கிய 11ஆம் வகுப்பு மாணவர்கள்.!

சென்னை : தற்போது வெடிகுண்டு மிரட்டல்களானது, இ-மெயில், குறுஞ்செய்தி, தொலைபேசி என பல்வேறு வழிகளில் விமான நிலையம், பள்ளிகளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.  அடிக்கடி இதுபோன்ற போலி மிரட்டல்கள் வந்தாலும், காவல்துறையினர் தொடர்ந்து உரிய சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்ததாக காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக குறுந்செய்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தியை […]

#Chennai 4 Min Read
Bomb Threat in Chennai Airport

இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : கடந்த 48 மணி நேரத்தில் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஆகாச ஏர் நிறுவனங்களின் 10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட்டில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரும், பித்தோராகர் மாவட்டத்தில் அவசரமாக தற்போது தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் பாதுகாப்பு அச்சுறுத்தலால், அகமதாபாத்தில் தரையிறங்கியது. அந்த வகையில், டெலியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்தம் […]

air india 3 Min Read
bomb threat

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : திமுக அரசை கண்டித்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கடிதம் மூலம் ரயில் நிலையங்களுக்க வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்த செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தில், “பாமகக்கு எதிராக திமுக செயல்படுவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே பள்ளிகள் மற்றும் விமான […]

#Chennai 3 Min Read
Bomb threat

டெல்லி – டொராண்டோ செல்லும் ஏர் கனடா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஏர் கனடா: கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன்-5) அன்று டெல்லியில் இருந்து டொராண்டோவுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் கனடா விமானத்திற்கு (AC43) வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது. நேற்று இரவு 10.50 மணியளவில் புறப்பட வேண்டிய இந்த ஏர் கனடா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன் அந்த விமானமும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லபட்டது மேலும், அதிலிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். அதை தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உட்பட்டதுடன் பயணிகளையும் சோதனை செய்துள்ளனர். கடந்த […]

#Delhi 2 Min Read
Default Image

சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

மும்பை: கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி வரை சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி மின்னஞ்சல் முகவரி மூலமாக மிரட்டல் மெயில் வந்தது. அதனை தொடர்ந்து பயணிகள் அவசரகதவு வழியாக வெளியேற்றப்பட்டு விமானம் முழுக்க வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது. இறுதியில் மிரட்டல் செய்தி போலி என தெரிவிக்கப்பட்டது தற்போது அதே போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இன்று சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் […]

#Chennai 4 Min Read
Default Image

டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.! 

சென்னை: டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கடிதம் மின்னஞ்சல் வாயிலாக கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் உள்துறை அமைச்சக வளாகத்தில் தீவிர சோதனையை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

#Delhi 2 Min Read
Delhi Home Ministry

13 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.! 

Bomb Threats : இந்தியா முழுக்க13 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஜெய்ப்பூர், பீகார் , ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 13 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நேற்று மாலை 3 மணி அளவில் மிரட்டல் செய்தி வந்துள்ளது. இ-மெயில் மூலமாக மத்திய பாதுகாப்பு படையினருக்கு (CSIF)  இந்த மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து லக்னோவில் உள்ள சவுத்ரி சரண்சிங் சர்வதேச […]

bomb threat 4 Min Read
Bomb Threats in 13 airports

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு (டெல்லியில் 60, நொய்டாவில் 1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டல் இமெயில்களை தொடர்ந்து, டெல்லி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளி மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு தேடுதல் குழுவினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அனைத்து பள்ளிகளிலும் தீவிர […]

#Delhi 4 Min Read
Delhi schools Bomb threat

பரபரப்பு…கர்நாடகாவில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

Bomb Threat: கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. READ MORE – உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா..! பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு மேலும் அதில், குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, கர்நாடக போலீஸார் […]

#Karnataka 3 Min Read
Bomb thread in Chennai Schools

மாணவர்கள் பதற்றம்: சென்னை, கோவை பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.!

Bomb Threat: சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள தி பிஎஸ்பிபி என்ற தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. READ MORE – ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.! இதனையடுத்து, மாணவர்கள் விரைவாக […]

#Chennai 5 Min Read
Bomb Threat

டெல்லி உயர்நீதிமன்றத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல்.! பாதுகாப்பு தீவிரம்….

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று மிக பெரிய அளவில்  வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இ- மெயில் வந்துள்ளது. அதில், இன்று (பிப்ரவரி 15) ஆம் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் மிக பெரிய குண்டு வெடிக்கும் என்றும், எவ்வளவு பாதுகாப்பு அமைத்தாலும், அனைத்து அமைச்சர்களையும் வரவழைத்தாலும், அனைவரையும் வெடிகுண்டு வைத்து தர்ப்போம் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தை […]

bomb threat 4 Min Read
Delhi high court bomb threat

இந்தியாவில் உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

இந்தியாவில் நெல்லை உள்ளிட்ட உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நெல்லையிலுள்ள அறிவியல் மையத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்தின் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் […]

#Nellai 3 Min Read
Bomb threat

விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை.! இந்திய விமானங்களால் துரத்தியடிக்கப்பட்ட ஈரான் விமானம்.!

இந்திய வான்வெளியில் நுழைந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பது போன்ற எச்சரிக்கை தகவல் கிடைத்தது. இதனால் இந்திய ஜெட் விமானங்களால் அந்த ஈரான் விமானம் வானில் துரத்தப்பட்டது. ஈரானை பூர்வீகமாகக் கொண்ட விமானம் ஒன்று அக்டோபர் 3ஆம் (இன்று) தேதி டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு இருப்பதாக டெல்லியில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கிடைத்த தகவலின் படி, ஈரான் விமானம் டெல்லியில் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை. அடுத்ததாக,  பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமான […]

- 2 Min Read
Default Image

பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்! வதந்தியை பரப்பிய மாணவர்கள்..

அமிர்தசரஸ் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தியை பரப்பிய 9ஆம் வகுப்பு 3 மாணவர்கள். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வதந்தியை 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் பரப்பியதாக போலீசார் தெரிவித்தனர். வதந்திகள் கண்டுபிடிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வதந்தி பரவிய நிலையில், அதே பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான மற்றொரு வதந்தி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Amritsar school 2 Min Read
Default Image

படத்தில் வாய்ப்புக்காக ; முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..!

உதயநிதி படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். நேற்று சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது நாளை முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டி இணைப்பை துண்டித்து விட்டார். இதைத்தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வண்டலூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் அந்த அடையாளத்தை நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பழனிவேல் என்பதும் […]

bomb threat 2 Min Read
Default Image