எல்லையில் ஊடுருவல்… ஜம்முவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

JK Terrorist killed

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மச்சல் செக்டரில் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மச்சல் செக்டரில் உள்ள காலா வனப்பகுதிக்குள், இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற போது கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்தது.

முன்னதாக நேற்று ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பேரா பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி)-யுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம், 12 ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கையெறி குண்டு முதலியவற்றை பறிமுதல் செய்ததாக அனந்த்நாக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்