#Breaking:கடந்த ஒரே நாளில் 402 பேர் கொரோனாவுக்கு பலி;14 லட்சத்தை தாண்டிய சிகிச்சை!

#Breaking: 402 people die of corona in last one day; over 14 lakh treatment!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 402ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,68,50,962 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,041 ஆக உயர்வு.

கடந்த 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 3,500 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,68,50,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 402ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,85,752 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,22,684பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,49,47,390 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,17,820ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,56,02,51,117 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 58,02,976பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பாதிப்பு:

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,041 ஆக உயர்ந்துள்ளது.