#BREAKING: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதால் 7 தமிழர்கள் கைது!

சித்துர் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக தமிழகத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்த ஆந்திர காவல்துறை.
ஆந்திர மாநிலம் சித்துரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டு, 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், 3 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சித்துர் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக அம்மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகன சோதனையின்போது 3 வாகனங்களில் செம்மரம் கட்டைகள் இருப்பது தெரிவந்துள்ளது. இதன்பின் செம்மரக் கட்டைகள், 3 வாகனங்களை பறிமுதல் செய்து, இதில் ஈடுபட்ட 7 தமிழர்களை அம்மாநில காவல்துறை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025