#BREAKING: விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்..!

Delhi Chief Minister Arvind Kejriwal has announced a one-day fast in support of protesting farmers in Delhi.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் ஒரு நாள் நோன்பு வைத்துக் கொள்ள வேண்டும், விவசாயிகளின் கோரிக்கையை ஆதரிக்க வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு செய்து கொடுத்த அடிப்படை வசதிகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 7-ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண்துறை தனியார் வசம் மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்து இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.