#BREAKING: உருமாறிய கொரோனா பாதிப்பு 25 ஆக உயர்வு..!

While 20 people were affected by the deformed corona until yesterday, today 5 more people are affected and now 25 people are affected.

இந்தியாவில் தற்போது உருமாறிய கொரோனாவால் தற்போது 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனியில் இருந்து திரும்பிய பயணிகளை கண்டறியும் பணிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் மேற்கொள்ளும்படி மத்திய அரசு தெரிவித்தது. பின்னர், சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தினமும் மத்திய அரசு உருமாறிய கொரோனாவால் பதியாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றுவரை தமிழகத்தை சார்ந்த ஒருவர் உட்பட 20 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில், இன்று மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டதால் தற்போது 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.