சுஷாந்த் மரண வழக்கு: ரியா சக்ரபோர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக நடிகர் ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக நடிகர் ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம், 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை தற்பொழுது சிபிஐ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் போதைப்பொருள் உபயோகித்தும், அது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ரியா சக்ரபோர்த்தியிடம் மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுஷாந்துக்கு ரியாதான் விஷம் கொடுத்து கொலை செய்ததாகவும், அவர் தான் கொலையாளி எனவும் சுஷாந்தின் தந்தை குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.