ஹத்ராஸ் வழக்கு.. சி.பி.ஐ நேரில் சென்று விசாரணை..!

Default Image

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 14-ம்தேதி 19 வயது தலித் இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் சி.பி.ஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்த நிலையில், தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், வன்கொடுமை நடந்த வயல்வெளி பகுதிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் சென்றனர். பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசாரும் அங்கு உள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு உயிரிழந்த இளம்பெண்ணின் சகோதரர் அழைத்து வரப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai