#CBSEBoardExam:அடுத்த ஆண்டு தேர்வு…சிபிஎஸ்இ மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் இருந்து ஒற்றைத் தேர்வு(single board exam) வடிவத்தில் நடத்த வாய்ப்புள்ளது என்று சிபிஎஸ்இ கல்வி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 2021-2022 கல்வியாண்டில்,சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் இரு பிரிவுகளாக நடத்துவதாக அறிவித்தது. அதன்படி,டெர்ம் 1 தேர்வு டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரை நடத்தப்பட்ட நிலையில்,சிபிஎஸ்இ 2-வது தேர்வு ஏப்ரல் 26 முதல் ஜூன் 15 வரை நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 2022-23 கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு ஒற்றைத் தேர்வு முறையில் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நடைமுறையை சிபிஎஸ்இ மாணவர்கள் வரவேற்று காத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025