14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பிரபல டிக்டாக் பிரபலம்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இணையத்தில்தான் உலா வருகின்றன. இணையத்தில் பெண்கள் ஆண்களுடன் ஏற்படும் உரையாடல் நாளடைவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சிறு பெண்கள் முதல் முதிய வயது பெண்கள் வரை பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
அந்த வகையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பார்கவ். டிக் டாக் பிரபலமான இவர் ‘Fun Bucket Bhargav’ என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பார்கவ் வீட்டிற்கு அருகே உள்ள காலனியை சேர்ந்த சிறுமி ஒருவர் இவரது வீடியோக்களை பார்த்து, பார்கவ்வின் ரசிகையாக மாறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி 14 வயது சிறுமி அவருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, டிக் டாக் பிரபலம் பார்கவ் தன்னிடம் பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
சிறுமி அளித்த தகவலை தொடர்ந்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் பார்கவ்வை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…