இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் கொரோனாவால் உயிரிழந்தார்.!

Published by
மணிகண்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் எம்பியுமான 73 வயது நிரம்பிய சேத்தன் சவுகான் உயிரிழந்தார்.

கடந்த ஜூலை மாதம் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக முன்னாள் எம்பியுமான 73 வயது நிரம்பிய சேத்தன் சவுகான் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

முதலில், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் குருகிராமினில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் 1991 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் உத்தரபிரதேசத மாநில  அம்ரோஹாவில் தொகுதியில் மக்களவை இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர் 1981 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேத்தன் சவுகான் இந்திய கிரிக்கெட் அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடியுள்ளார். முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உடன் பல போட்டிகளில் வலுவான தொடக்கத்தினை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

23 minutes ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

58 minutes ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

1 hour ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

“போரை தொடங்கிடீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

2 hours ago

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago