மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அந்த காப்பகத்தின் உரிமையாளரால் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது.
கடுமையான பாலியல் துன்புறுத்தல் காரணமாக அவர்களில் மூன்று பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் உரிமையாளரான70 வயது முன்னாள் ராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
unknown nodeபாலியல் துன்புறுத்துவதாக இந்த காப்பகத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களும், இரண்டு சிறுமிகளும் சமூக நீதித்துறைக்கு சென்று தங்கள் புகர் தெரிவித்தனர். இந்த புகாரை சமூக நீதித்துறை போலீசுக்கு அனுப்பி வைத்தது.இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
unknown nodeஇந்த கொடுர காப்பகத்தில் பாலியல் தாக்குதலில் காயமடைந்து அதிகப்படியான இரத்தப்போக்கில் சிறுவன் ஒருவன் இறந்து உள்ளான் . மற்றொரு சிறுவன் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்து உள்ளான். மூன்றவதாக ஒரு சிறுவன் கடும் குளிரில் இரவு முழுவதும் வெளியே நிற்க வைத்ததால் இறந்ததாக சிறுவர்களும், சிறுமிகளும் புகார் அளித்து உள்ளனர்.
unknown nodeஇந்த காப்பகம் அரசு நிதி பெற்று 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஆண்-பெண் குழந்தைகள் என்று பாராமல் பசித்த புலியை போலா வேட்டியாடிய முன்னாள் ராணுவ வீரரின் அறுவருக்க இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டை காத்த முன்னாள் ராணுவம் செய்யும் செயலா..?இது பிஞ்சுகளை பாலியல் துன்புறுத்தலில் நசுக்கி கொன்ற காப்பகத்தின் உரிமையாளாரும்,முன்னாள் ராணுவ வீர்ரும் ஆகிய இந்த கொடுரனுக்கு கண்டனங்கள் நாடு முழுவதும் வழுத்து வருகின்றது.
DINASUVADU