இந்தியாவிற்கு 3,800 கோடியை கடனாக அளிக்கும் சீனாவின் AIIB வங்கி

இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் சூழ்நிலையில் சீனாவின் ஆதரவு பெற்ற வங்கி இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது .சீனாவில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் AIIB வங்கி 500 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3,800 கடன் உதவி அளித்துள்ளது .
இதன் மூலம் இந்தியா கொரோனா க்கு எதிராக போராடவும் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் இது உதவும் என்று AIIB தெரிவித்துள்ளது. இது உலக வங்கியால் ஒருங்கிணைக்கப்படும், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல் மற்றும் ஆராய்ச்சிக்கு துணைபுரியும் என்று கூறியுள்ளது.
இந்த கடன் 10 பில்லியன் டாலர் நிதி வசதியின் ஒரு பகுதியாகும், இது பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு தொற்றுநோயை சமாளிக்க உதவும் என்று AIIB அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025